திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2021 9:21 PM GMT (Updated: 3 May 2021 9:21 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 65 ஆக உயர்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேர் நேற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 448 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story