10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்


10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்
x
தினத்தந்தி 4 May 2021 1:02 AM GMT (Updated: 4 May 2021 1:02 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வபெருந்தகை அமோக வெற்றி பெற்றார். இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை 2001,2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா தொடர்ந்து 2 முறை கைப்பற்றி காங்கிரஸ் கோட்டையாக விளங்க செய்தார்.

இந்தநிலையில், 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா தோல்வியை தழுவினார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை அ.தி.மு.க. வேட்பாளர் பழனியிடம் தோல்வியை தழுவினார்.

10 ஆண்டுகள்

அதைதொடர்ந்து, தற்போது நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமை மீண்டும் பழனியை களம் இறக்கியது. எதிர்தரப்பில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை மீண்டும் களம் இறங்கினார்.

கடுமையான போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை 1,15,353 வாக்குகள் பெற்று 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 10 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கைப்பற்றி காங்கிரஸ் கோட்டை என அக்கட்சி மீண்டும் நிரூபித்து உள்ளது

Next Story