கடையில் பணம், பொருட்கள் திருட்டு


கடையில் பணம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 May 2021 7:21 PM GMT (Updated: 4 May 2021 7:21 PM GMT)

கடையில் பணம், பொருட்கள் திருட்டு போனது.

முக்கூடல்:

முக்கூடல் ராஜாங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர். அங்கு இருந்த ரூ.2,500 மற்றும் பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மறுநாள் கடைக்கு வந்த ராமசாமி பணம், பொருட்கள் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story