தென்காசி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி மாவட்டத்தில்  பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2021 8:09 PM GMT (Updated: 5 May 2021 8:09 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய தலைவர் மாறவர்மன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் கே.எம். அருள்செல்வன், இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சாக்ரடீஸ், மேற்கு ஒன்றிய பார்வையாளர் சுடலையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் கலந்து கொண்டவர்கள் மேற்கு வங்காள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

கடையம்

கடையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன், கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் சுசிலா குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளா் காளி, துணை தலைவா் பாலசுப்பிரமணி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் மாரியப்பன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story