வாலிபர் கைது


வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 May 2021 8:29 PM GMT (Updated: 5 May 2021 8:29 PM GMT)

போலீஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மானூர்:

மானூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 23). இவர் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பாக, நிபந்தனை ஜாமீன் பேரில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். மேலும் அந்த வழக்கு தொடர்பாக அவரது மோட்டார் சைக்கிள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கையெழுத்து போட வந்த செந்தில்குமார் போலீசாரிடம் அனுமதி பெறாமல் மோட்டார் சைக்கிளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story