நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல்


நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2021 9:34 PM GMT (Updated: 5 May 2021 9:34 PM GMT)

நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 35 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.

நம்பியூர்
நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 35 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
சாராயம்
நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் போலீசாருடன் ராயர்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார்சைக்கிளில் கேன்களுடன் வந்தார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஒவ்வொரு கேனிலும் தலா 3 லிட்டர் என மொத்தம் 9 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. 
3 பேர் கைது
உடனே போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேலன் (வயது 35), சதீஷ்குமார் (31), பிரபு (38) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 9 லிட்டர் சாராயம், காய்ச்சுவதற்காக வைத்திருந்த 35 லிட்டர் ஊறல், மூலப்பொருட்கள், மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தார்கள். 
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோபி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

Related Tags :
Next Story