மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கட்சி பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அருண்குமார்(வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் உடையார்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அருண்குமார், பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கச்சிபெருமாள் அருகே சென்றபோது எதிரே திருச்சி- சிதம்பரம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி, அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் விரைந்து வந்து, அருண்குமாரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story