கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்கள சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியான கோவிட் சீல்டு ஊசியை போட்டுக்கொண்டனர். சாலைக்கிராமம் அரசு மருத்துவ மனையின் நடமாடும் மருத்துவ குழுவினர் இந்த முகாமை நடத்தினர். சாலைக்கிராமம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில் இளையான்குடி பேரூராட்சி் செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story