குளத்தில் செம்மண் அள்ளிய 3 பேர் கைது


குளத்தில் செம்மண் அள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2021 8:12 PM GMT (Updated: 7 May 2021 8:12 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருேக குளத்தில் செம்மண் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே முன்னிலைகோட்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து அனுமதியின்றி செம்மண் அள்ளி செல்வதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு புகார் வந்தது. 

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சின்னாளப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள ஒரு குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண்ணை அள்ளி ஒரு லாரியில் கொண்டு செல்ல முயன்றனர். 

உடனே அவர்களை பிடித்து சின்னாளப்பட்டி போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அந்த லாரியும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

 விசாரணையில் அவர்கள், முன்னிலைகோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 30), ரவிக்குமார் (28), டேவிட் செல்வராஜ் என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர்.  

Next Story