மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 May 2021 5:40 PM GMT (Updated: 9 May 2021 5:40 PM GMT)

கரூர் மாவட்டத்தில் புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 224 பேர் பூரண குணம் அடைந்து நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனாவிற்கு 1,778 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story