409 பேருக்கு கொரோனா தடுப்பூசி


409 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 May 2021 7:57 PM GMT (Updated: 13 May 2021 7:57 PM GMT)

409 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 363 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 46 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 36,269 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2,054 பேருக்கும் என மொத்தம் 38,323 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 6,980-ம், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 500-ம் கையிருப்பில் உள்ளது.

Next Story