தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது நண்பருக்கு வலைவீச்சு
தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது நண்பருக்கு வலைவீச்சு.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவ பெருமாள் மகன் முத்துமணி(வயது 20), என்பதும் தப்பி ஓடியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் கவியரசன் என்பதும் இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முத்துமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கவியரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவ பெருமாள் மகன் முத்துமணி(வயது 20), என்பதும் தப்பி ஓடியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் கவியரசன் என்பதும் இருவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முத்துமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கவியரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story