கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2021 4:27 PM GMT (Updated: 19 May 2021 4:27 PM GMT)

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் ேபாலீசார் ஏ.வெள்ளோடு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் வெள்ளோட்டை சேர்ந்த குணசீலன் (வயது 29), சித்தையன்கோட்டையை சேர்ந்த அதிவீரபாண்டியன் (28) என்பது தெரியவந்தது. 

அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

Next Story