கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவருடைய பசு மாடு ஒன்று நேற்று மதியம், அவரது வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடியது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story