திட்டக்குடியில் சோகம் விஷம் குடித்து தம்பதி தற்கொலை விபத்தில் மகள் உயிரிழந்ததால் விபரீத முடிவு


திட்டக்குடியில் சோகம் விஷம் குடித்து தம்பதி தற்கொலை விபத்தில் மகள் உயிரிழந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 28 May 2021 8:07 PM GMT (Updated: 28 May 2021 8:07 PM GMT)

தம்பதி தற்கொலை

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பாரதி (வயது 55). கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு லாவண்யா(23), ஜெயந்தி (18) என்று 2 மகள்கள் இருந்தனர். 
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் லாவண்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மனமுடைந்து காணப்பட்டனர். 
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாரதி, ராஜேஸ்வரி ஆகியோர் நேற்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். இதில் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாய், தந்தை பிணமாக கிடப்பதை பார்த்து இளையமகள் ஜெயந்தி கதறி அழுதார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story