வந்தவாசி அருகே; மின்சாரம் தாக்கி விவசாயி பலி


வந்தவாசி அருகே; மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 29 May 2021 4:32 PM GMT (Updated: 29 May 2021 4:32 PM GMT)

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மோகன், விவசாயி. இவருக்கு பொன்னி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

சம்பவத்தன்று இவருடைய விவசாய நிலத்திற்கு பம்புசெட்டில் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுவிட்டு நீர் இரைக்கும் அறைமேல் ஏறுவதற்காக மின் இணைப்பு குழாய் வழியாக ஏறியதாக கூறப்படுகிறது. 

அப்போது மின் இணைப்பு குழாயில் கசிந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நிலத்துக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் அவருடைய மனைவி பொன்னி கணவரை தேடிச்சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது ெதரிந்தது. 

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story