2,179 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


2,179 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 6:23 PM GMT (Updated: 30 May 2021 6:23 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது அனுமதியின்றி சுற்றி திரிந்ததாக 2 ஆயிரத்து 179 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது அனுமதியின்றி சுற்றி திரிந்ததாக 2 ஆயிரத்து 179 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தெரிவித்தார்.

ஊரடங்கு

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காரணம் இல்லாமல் சுற்றி திரிந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்படி சிவகங்கை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 42 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் 49 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யபட்டன.
 திருப்பத்தூர் போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 22 இருசக்கர வாகனங்களும், தேவகோட்டை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 25 இருசக்கர வாகனங்களும், மானாமதுரை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் ஒரு ஆட்டோ மற்றும் 20 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

2,179 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 ஆட்டோகள் 11 கார்கள் மற்றும் 2,179 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story