தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு பாராட்டு


தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 31 May 2021 4:56 PM GMT (Updated: 31 May 2021 4:56 PM GMT)

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 28 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story