ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு


ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 May 2021 4:59 PM GMT (Updated: 31 May 2021 4:59 PM GMT)

ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கீரமங்கலம், ஜூன்.1-
கீரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து  10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மேற்பனைக்காட்டில் டீ விற்பனை செய்தவரிடம் இருந்து ஒரு டீ கேனும் பறிமுதல் செய்யப்பட்டது.  இதேபோல் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி, கே ப்பறை பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்களை வல்ல த்தராககோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் மீன் வியாபாரம் செய்தவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 31 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 6 பேர் என மொத்தம் 37 பேர் மீது இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story