விபத்தில் ஒருவர் பலி


விபத்தில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 6:16 PM GMT (Updated: 31 May 2021 6:16 PM GMT)

விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்

கமுதி
கமுதி அருகே மண்டபசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 53). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மேலமுடி மன்னார்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரம் ஒன்றின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கமுதி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story