கல்வராயன் மலை அடிவாரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது


கல்வராயன் மலை அடிவாரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 4:57 PM GMT (Updated: 4 Jun 2021 4:57 PM GMT)

கல்வராயன் மலை அடிவாரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது


கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மட்டபாறை, வைலம்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மட்டப்பாறை சிவன் கோவில் அருகே சாராயம் விற்ற சின்னத்தம்பி(வயது26), கோமுகி அணை அருகில் சாராயம் விற்ற தெங்கியாநத்தம் ராமு(28), பழனிச்சாமி(30), திருக்கனூர் அருகே சாராயம் விற்ற தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி(23), புருஷோத்தமன்(30), வடக்கநந்தல் கிராமத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற அருள் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து  மொத்தம் 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.



Next Story