கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி ஒரே நாளில் 377 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி ஒரே நாளில் 377 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 5:44 PM GMT (Updated: 4 Jun 2021 5:44 PM GMT)

கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள். ஒரேநாளில் 377 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் திருவள்ளூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 49 வயது ஆண், 43 வயது ஆண், 48 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்தது.
377 பேர் பாதிப்பு
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 637 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று 6 பேர் இறந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 ஆயிரத்து 708 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உளளனர். 3 ஆயிரத்து 514 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
............

Next Story