காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2021 6:09 PM GMT (Updated: 4 Jun 2021 6:09 PM GMT)

காரிமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம்:
கட்டிட மேஸ்திரி மனைவி
காரிமங்கலம் அருகே உள்ள ஜொல்லம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். 
கொரோனா தொற்று முழு ஊரடங்கு காரணமாக அவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அங்கு சங்கீதாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவர் பேகாரஅள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா வீடு திரும்பினார்.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கீதா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story