விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2021 7:55 PM GMT (Updated: 9 Jun 2021 7:55 PM GMT)

மானூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மானூர், ஜூன்:
மானூர் அருகே உள்ள அலவந்தான்குளத்தை சேர்ந்தவர் குணசிங் மகன் இருதயராஜ் (வயது 26). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த இருதயராஜ் கடந்த 4-ந் தேதி இரவு தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்துள்ளார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படவே அவரது சகோதரர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இருதயராஜ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story