காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது


காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 5:32 PM GMT (Updated: 10 Jun 2021 5:32 PM GMT)

காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்
போலீசார் வாகன தணிக்கை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் நேற்று சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 4 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. 
2 பேர் கைது
இதையடுத்து காரில் கள்ளச்சாராயம் கடத்தியதாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35). கரூர் மாவட்டம் புகளூர் கொங்கு நகரைச்சேர்ந்த முருகேசன் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் அதனை கடத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story