கோவில்பட்டியில் 197 பேருக்கு கொரோனா பரிசோதனை


கோவில்பட்டியில் 197 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 11 Jun 2021 1:53 PM GMT (Updated: 11 Jun 2021 1:53 PM GMT)

கோவில்பட்டியில் 197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் கொரோனா ஊரடங்கை மீறி, காரணமில்லாமல் வெளியே சுற்றுபவர் களுக்கும், வாகனங் களில் செல்பவர் களுக்கும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப் பட்டு வருகிறது.
நேற்று ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரிசோதனை முகாம் டாக்டர் கள் மனோஜ், பிரணவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினரால் நடத்தப்பட்டது. இதில் தானாக முன்வந்த பொதுமக்கள் 30 பேர் மற்றும் காரணமின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் உள்பட 197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

Next Story