ஒப்பதவாடி கூட்ரோட்டில் தம்பதியை வழிமறித்து செல்போன் பறிப்பு


ஒப்பதவாடி கூட்ரோட்டில் தம்பதியை வழிமறித்து செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 5:25 PM GMT (Updated: 11 Jun 2021 5:25 PM GMT)

ஒப்பதவாடி கூட்ரோட்டில் தம்பதியை வழிமறித்து செல்போன் பறிக்கப்பட்டது.

பர்கூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சென்னமேடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (வயது 36). இவருடைய மனைவி மஞ்சுளா (25). தற்போது இவர்கள் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அருகே குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ஒப்பதவாடி கூட்ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தம்பதியை வழி மறித்தனர். பின்னர் தயாநிதி சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு, மஞ்சுளாவை கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து அங்கிருந்து அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story