பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 2:42 PM GMT (Updated: 12 Jun 2021 2:42 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ., வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், ஆதிதிராவிடர் பிரிவு மாநில அமைப்பாளர் கோவில் மதிவாணன், மாவட்ட பொது செயலாளர் முத்துசாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் மாநில பொது செயலாளர் அன்பரசு கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனை தொடர்ந்து காந்திஜி சாலையில் உள்ள 3 பெட்ரோல் பங்குகள் உள்பட மொத்தம் 5 பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் நிர்வாகிகள் மூங்கில் ராமலிங்கம், நவாஸ், ராஜா, சுதா, ராம்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.எஸ்.குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் செல்வம், இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் பிரியகுமார், சிவகுமார், பொதுச் செயலாளர் தேவநேசன், நகர நிர்வாகிகள் ராஷித், அறிவுடைநம்பி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சீர்காழி அருகே விழுந்திட சமுத்திரம் ஊராட்சியில் சீர்காழி மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மதன்குமார், அருண், சம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருமுல்லைவாசல் ஊராட்சியில் கொள்ளிடம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிவராமன், கட்சி நிர்வாகி நகுதா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொறையாறு நகர தலைவர் சம்பந்தம், வட்டார காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

திருவெண்காட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார். இதில் விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், வட்டார பொதுச் செயலாளர் பிரபாகரன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பானுசேகர், கொள்ளிடம் மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம், நகர செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கண்ணையன், முருகேசன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story