கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி


கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 4:57 PM GMT (Updated: 13 Jun 2021 4:57 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 167 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 24 ஆயிரத்து 584 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 176 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 43 வயதுடைய ஆண், 65 வயதுடைய முதியவர், 73 வயதுடைய முதியவர், 62 வயதுடைய பெண் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பெண், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதுடைய பெண் ஆகியோர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பலி எண்ணிக்கை 182 ஆக உயர்வு

 இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின்  எண்ணிக்கை 176-ல் இருந்து 182 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 960 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.
 இதில் 167 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 584-ல் இருந்து 24 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்து 975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story