இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2021 5:03 PM GMT (Updated: 13 Jun 2021 5:03 PM GMT)

திருக்கோவிலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வெளாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி திவ்யா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் திவ்யா தனது வீட்டில் தூக்குப்போட்டு  கொண்டார். இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கொடுமை காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story