கொரோனாவுக்கு 4 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72, 47 வயதுடைய ஆண்கள் 2 பேரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 55 வயதுடைய ஆண் ஒருவரும், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 65 வயதுடைய மூதாட்டியும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 181 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 928 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story