திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 4:59 PM GMT (Updated: 15 Jun 2021 4:59 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 77 வயது மூதாட்டி, திண்டுக்கல்லை சேர்ந்த 61 வயது மூதாட்டி மற்றும் 64 வயது முதியவர் ஆகிய 3 பேர் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே மாவட்டத்தில் 19 பெண்கள் உள்பட மேலும் 129 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்து 578 ஆக உயர்ந்தது. அதேநேரம் 301 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 28 ஆயிரத்து 744 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 1,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story