புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது


புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2021 5:33 PM GMT (Updated: 15 Jun 2021 5:33 PM GMT)

புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கொத்தி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மனைவி சந்தியா (வயது 22). இவர் வயலுக்கு சென்று விட்டு செல்போனில் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வரிஞ்சிபாக்கத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பாலாஜி (26) என்பவர் திடீரென பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச் செல்ல முயன்றார்.

 அப்போது சந்தியா கூச்சலிட்டார். உடன்  அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து,  பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.

Next Story