சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் கொத்தனார் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் கொத்தனார் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 10:45 AM GMT (Updated: 19 Jun 2021 10:45 AM GMT)

கொள்ளிடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆனந்தக்கூத்தன் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் காரல்மார்க்ஸ் (வயது 23). கொத்தனாரான இவர், அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கொடுத்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் காரல்மார்க்சை கைது செய்தனர்.

Next Story