டிரைவர்- எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை


டிரைவர்- எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 7:58 PM GMT (Updated: 19 Jun 2021 7:58 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர்- எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பெரம்பலூர்:

டிரைவர்
பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் மேற்கு தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். துரைசாமிக்கு சுரேஷ்குமார், ஞானவேல்(வயது 27) என்ற 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
இதில் டிரைவரான ஞானவேல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் ஞானவேல் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை துரைசாமி கண்டித்துள்ளார்.
சாவு
இதனால் மனமுடைந்த ஞானவேல் வீட்டின் பின்னால் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ஞானவேலை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானவேல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு செல்லாததை...
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு மணிகண்டன் (வயது 23) என்ற ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். எலக்ட்ரீசியனான மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவர் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை சோமசுந்தரம் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று களரம்பட்டியில் சோமசுந்தரம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் வயலுக்கு சென்று புற்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டவர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story