தாராபுரம் ரேஷன் கடை முன்பு முதியவர்கள் ஆர்ப்பாட்டம்


தாராபுரம் ரேஷன் கடை முன்பு  முதியவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 7:12 PM GMT (Updated: 21 Jun 2021 7:12 PM GMT)

தாராபுரம் ரேஷன் கடை முன்பு முதியவர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், 
தாராபுரத்தை அடுத்த வீராட்சிமங்கலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ரேஷன் கார்டுகளை கணக்கெடுப்பு சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது வீராட்சிமங்கலத்தில் வசித்து வரும்  20 முதியோர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு ரேஷன் அட்டை கணக்கெடுப்பு பணியில் தனி நபர் ஸ்மார்ட் அட்டை பெறுவதற்கு உண்டான வழிமுறைகள் தெரியாததால் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க முடியவில்லை. ரேஷன் பொருட்கள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டு மூலமாக மட்டுமே, வழங்கப்படுவதால் ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள், ரேஷன் கடையில் எந்த பொருள் பெற முடியவில்லை. இதனால்  தனி நபர் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கவேண்டுமென  கலெக்டர், உள்ளிட்ட அலுவலகங்களுக்கு  மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று வீராட்சிமங்கலம் ரேஷன் கடையை முதியோர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தனிநபர் ஸ்மார்ட் அட்டை கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் எனவும் கோஷமிட்டனர். 

Next Story