நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,728 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,728 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 1:08 AM GMT (Updated: 22 Jun 2021 1:10 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,728 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,728 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று 376 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 40 ஆயிரத்து 39 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 383 பேர் இறந்து விட்ட நிலையில் 2,306 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த வாரங்களை ஒப்பிடும்போது சற்று குறைந்து இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story