காதல்ஜோடி தஞ்சம்


காதல்ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 22 Jun 2021 1:50 PM GMT (Updated: 22 Jun 2021 1:50 PM GMT)

வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வி.சித்தூரை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 23). கட்டிட தொழிலாளி. 

இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, அவருடன் தேனி மாவட்டம் மஞ்சனூத்து பகுதியை சேர்ந்த பிரியங்கா (21) என்பவரும் படித்து வந்தார். 

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
இந்த நிலையில் அவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் காதலர்கள் இருவரும் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சி, வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

அதன் பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆண்டவரின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் மணமக்களை அனுப்பி வைத்தனர்.

Next Story