ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 4:50 PM GMT (Updated: 3 July 2021 4:50 PM GMT)

காளையார்கோவிலில் தமிழ்ப்பேரவை மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் தேரடி திடலில் தமிழ்ப்பேரவை மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இதில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் பாவேல், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோவிலில்களில் தமிழ்வழியில் பூஜை நடத்த சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Next Story