நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 3 July 2021 6:43 PM GMT (Updated: 3 July 2021 6:43 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்து உள்ளது.
118 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44,950 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,068 ஆக அதிகரித்து உள்ளது.
2 பேர் பலி
இதற்கிடையே நேற்று இம் மாவட்டத்தில் 228 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை இம்மாவட்டத்தில் 43 ஆயிரத்து 174 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 1,474 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 418 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். இதனால் இம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story