துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு


துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 8 July 2021 8:04 PM GMT (Updated: 8 July 2021 8:04 PM GMT)

முக்கூடல் அருகே துக்க வீட்டிற்கு வந்த வாலிபர் திடீரென்று இறந்தார்.

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் பொட்டல் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மணிமாறன் (வயது 22). இவர் தனது நண்பர்களுடன் முக்கூடல் தியாகராஜர் தெருவில் உள்ள ஒரு துக்க வீட்டுக்கு நேற்று சென்றார். அங்கு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் அங்கு வந்து, மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story