ஆபாச படம் எடுத்து மிரட்டி பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்


ஆபாச படம் எடுத்து மிரட்டி பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 11 July 2021 6:37 PM GMT (Updated: 11 July 2021 6:37 PM GMT)

செஞ்சி அருகே ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள மே.காட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவருக்கு, அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வரும் 16 வயதுடையை மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்  தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி முருகன், அந்த மாணவியிடம் உல்லாசம் அனுபவித்தார். 
அந்த சமயத்தில் முருகன், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை அடிக்கடி மாணவியிடம் காண்பித்து மிரட்டி அவரை முருகன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோ மற்றும் ஆபாச குறுஞ்செய்தியை மாணவியின் செல்போனுக்கு அவர் அனுப்பி மிரட்டி வந்துள்ளார். 

கைது

 தனக்கு நடந்த கொடூரத்தை பற்றி தாயாரிடம் கூறி அந்த மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story