ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது
ஓடையில் மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே வங்குடி கிராமத்தில் உள்ள ஓடையில் ஒருவர் மாட்டு வண்டியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், வங்குடி நடுத்தெருவை சேர்ந்த பிரேம்குமார்(வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story