கொரோனாவுக்கு பெண் பலி


கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 16 July 2021 3:47 PM GMT (Updated: 16 July 2021 3:47 PM GMT)

கொரோனாவுக்கு பெண் பலியானார்.

தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 742 ஆக அதிகரித்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேனியை சேர்ந்த 49 வயது பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 509 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் நேற்று குணமாகினர். 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story