கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்


கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
x
தினத்தந்தி 22 July 2021 5:59 PM GMT (Updated: 22 July 2021 6:01 PM GMT)

கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்.

ஊட்டி,

குன்னூர் அருகே காமராஜபுரம் பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று காலையில் வந்த பக்தர்கள் பூஜை பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலையில் கரடி கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று, பூஜை பொருட்களை சேதப்படுத்தியதும், அங்கு வைக்கப்பட்டு இருந்த எண்ணெயை குடித்து விட்டு சென்றதும் தெரியவந்தது. 

இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்குள் இதுவரை 2 முறை கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து உள்ளது. வனத்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நாங்களே இரவும், பகலும் கிராமத்தை காவல் காக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே கரடிகள் ஊருக்குள் புகுவதை தடுத்து, அவைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Next Story