பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 7:15 PM GMT (Updated: 26 July 2021 7:15 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்
கரூர் மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் செல்வம், மகளிர் அணி தலைவி சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய ேவண்டும், விவசாயிகளின் 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் தர வேண்டும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story