வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி வாலிபர் கைது


வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 4:03 AM GMT (Updated: 29 July 2021 4:03 AM GMT)

வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சேர சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 23). இவர், ஏரோனாட்டிகல் படித்து முடித்துள்ளார். மேற்படிப்புக்காக வெளிநாட்டில் சென்று படிக்க ஆசைப்பட்டார்.

இதையறிந்த அவரது வீட்டின் அருகே வசிக்கும் கார்த்திக் (35) என்பவர் வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி முதல் தவணையாக ரூ.38 லட்சத்து 89 ஆயிரத்தை கார்த்திக்கிடம் வெங்கடேஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கார்த்திக், சொன்னபடி வெங்கடேசுக்கு இதுவரை வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சேர சீட் வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த மோசடி குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் பணமோசடி செய்த கார்த்திக் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக்கின் மனைவி சவ்கார்த்திகா (30) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story