கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை


கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
x
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:

கொரோனா 3-ம் அலை வரலாம் என்று மருத்துவக்குழுவினர் கூறுவதால், அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்க கலெக்டர் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.  அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்களுக்கு அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story