புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Aug 2021 7:47 PM GMT (Updated: 1 Aug 2021 7:47 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 25 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 8 பேரும் நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 115 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 215 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 264 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 494 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 576 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story