மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 7:50 PM GMT (Updated: 1 Aug 2021 7:50 PM GMT)

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மதுரை
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சந்திரா(வயது 70). நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story